ஆடுகளை திருட முயன்ற 2 பேர் கைது

0 9
Stalin trichy visit

திருச்சி அக். 31 திருச்சி எடமலைப்பட்டி புதூர் மேல வடக்கு தெருவை சேர்ந்தவர் தருண்குமார் (வயது22).இவர் ஆடு,மாடுகளை வளர்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மதியம் எடமலைப்பட்டி புதூர் கீழ வடக்கு வீதி அருகே உள்ள காலியான இடத்தில் இவரது ஆடு, மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது . அப்போது, ​​மர்ம நபர்கள் ஒரு ஆட்டோவில் அங்கு வந்து ஆடுகளை ஆட்டோவில் ஏற்றி ஆடு திருடினர். அப்பொழுது இதனை பார்த்த பொதுமக்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து ஆடுகளை கீழே இறக்கிவிட்டு அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்குப்பதிந்து பாலக்கரை கெம்ம்ஸ்டவுன் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்த நெல்சன் (வயது31) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஹரிஷ் சகாயராஜ் (வயது33) இருவரை கைது செய்தனர் . மேலும் அவரிடம் இருந்த ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.