போதை மாத்திரை விற்பனை செய்த 5 பேர் கைது
திருச்சி ஏப் 3- திருச்சி கீழ சிந்தாமணி பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் கீழ சிந்தாமணி பகுதியில் சென்று பார்த்தபொழுது அங்கு போதை மாத்திரை விற்பனை செய்து கொண்டிருந்த காட்டூர் பகுதி சேர்ந்த நஸ்ருதீன் (வயது 27) காந்திபுரத்தை சேர்ந்த காட்டூர் பகுதியில் சேர்ந்த தினேஷ் குமார் (வயது 27) அரியமங்கலம் பகுதியை சேர்ந்த உசேன் பாஷா (வயது 21), கள்ளர் தெருவை சேர்ந்த சூர்யா (வயது 22) ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து போதை மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர்.