தில்லை நகரில் வணிக வளாக காவலாளி திடீர் மரணம்
திருச்சி செப். 22 திருச்சி தில்லை நகர் எட்டாவது கிராஸ் வடவூர் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை வயது 62 இவர் தில்லைநகர் ஏழாவது கிராஸ் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் காவலாளியாக பணியாற்றி வந்தார் சம்பவத்தன்று பணியில் இருந்த போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார் அவரது மூக்கின் வழியாக ரத்தம் வழிந்து காணப்பட்டது இது குறித்து அவரது மகன் நாகராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் தில்லைநகர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.