திருவரங்கத்தில் தீயில் கருகி இளம்பெண் உயிரிழப்பு
திருச்சி ஜன.22 திருவரங்கம் அம்மா மண்டபம் ரோடு அடுக்குமாடி குடியிருப்பு குடியிருப்பில் வசித்து வருபவர் சங்கர்.இவரது மனைவி வைதேகி (வயது 40).இவர் சம்பவத்தன்று வீட்டில் விளக்கு ஏற்றுக் கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக இவரது ஆடைகளில் தீ பட்டது.அந்த தீ மள மளவென பரவியதால் உடல் கருகினார்.உடனே அவரை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.ஆனால் சிகிச்சை பலனின்றி வைதேகி பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து அவரது கணவர் சங்கர் அளித்த புகாரி அடிப்படையில் திருவரங்கம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மதியழகன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.