லால்குடி அரசு கல்லூரியில் தமிழ்த்துறை மாணவர் மன்ற தொடக்கவிழா
திருச்சி, பிப்.11 திருச்சி மாவட்டம், லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையில் மாணவர் மன்ற தொடக்கவிழா கல்லூரியின் முதல்வர். த.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் தமிழ்ச்செம்மல் இரா.இளங்கோவன் (இயக்குநர்,இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கு) , துறைத்தலைவர் அசோக்குமார், சகாயராஜ், வீரமணி சுலைமான், தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயப்பிரகாஷ், YRC ஒருங்கிணைப்பாளர்கள் பேரா.தீபாதேவி,(yRC), ஒருங்கிணைப்பாளர்கள்( NSS) சுகன்யா,ஆனந்த், உடற்கல்வி பயிற்றுனர் கார்த்திகேயன் மற்றும் பேராசிரியர்கள் ,மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர் தமிழ் துறைப்பேராசிரியர்கள் ராஜா,அசோக் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.
தமிழ்த்துறைத் தலைவர் த.மஞ்சுளாதேவி வரவேற்றார். பேரா.இளமதி நன்றி கூறினார்.