வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி
திருச்சி, ஏப். 22 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நாளை (ஏப்.23) நடைபெறவுள்ளது. இப்பணிகளுக்காக திருச்சியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட், கட்டுப்பாட்டு கருவிகள் ஆகியவை வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து மேற்கு தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல்துறையினர் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாகனங்களில் வைத்து அனுப்பி வைக்கப்படுகிறது.