பதிவான அஞ்சல் வாக்குகள் பிரித்து அனுப்பும் பணி : கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் ஆய்வு
திருச்சி,ஏப்.28 திருச்சி கலையரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்தில் தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களை சேர்ந்த பதிவு செய்த அஞ்சல் வாக்குகளை அந்தந்த மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கிடும் பணியினை கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் அ.சிவஞானம், திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
இந்நிகழ்வில் அனைத்து மாவட்டத்திலிருந்தும் அஞ்சல் வாக்குகளை கவனிக்கும் பொறுப்பு அலுவலர்கள், வேட்பாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.