திருச்சி மாநகராட்சியில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்
திருச்சி, ஜூலை 13 திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் மேயர் திரு. மு.அன்பழகன், தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் துணை மேயர் ஜி. திவ்யா ,மண்டலத் தலைவர்கள் துர்காதேவி, பி.ஜெயநிர்மலா, ஜெயலட்சுமி கண்ணன், நகர்நல அலுவலர் கார்த்திகேயன், செயற்பொறியார்கள்,உதவி ஆணையர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கைகள் மேற்கொண்டார்கள்.