அண்ணா விளையாட்டரங்கில் மாணவிகளுக்கான தடகள தொடர் போட்டி

0 9
Stalin trichy visit

திருச்சி, நவ.22  இந்திய தடகள சம்மேளனம், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட தடகள சங்கம் இணைந்து 14, 16 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான அஸ்மிதா (வீரமங்கை) தடகள தொடர்போட்டி திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் இன்று 22.11.25 காலை 9.00 மணிக்கு திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் டி.ராஜு தலைமையில், தடகள சங்க பொருளாளர் ச.ரவிசங்கர், மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம், ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்பாபு, இணை செயலாளர் எம்.ரமேஷ், எம்.கனகராஜ் ஆகியார் முன்னிலையில் நடந்தது. போட்டியைஒலிம்பியன் சுப்ரமணியன், திருச்சி விளையாட்டு விடுதி மேலாளர் கண்ணன் தொடங்கி வைத்தார்கள்.

60 மீ, 600மீ ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றிபெறும் மாணவிகளுக்கு உதவித்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.

இந்திய நாடு முழுவதும் 300 மாவட்டங்கள் தேர்வுசெய்யப்பட்டு பள்ளி மாணவிகளை மையப்படுத்தி தடகளப்போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் தேர்வுசெய்யப்படும் மாணவிகள் தேசிய அளவிலான பயிற்சிமுகாமில் பங்கேற்க அனுப்பிவைக்கப்பட உள்ளார்கள். திருச்சி மாவட்ட தடகள சங்க செயற்குழு உறுப்பினர் எஸ்.ரெங்காச்சாரி நன்றியுரை ஆற்றினார்.

Leave A Reply

Your email address will not be published.