தொட்டியம் வழக்கறிஞர் சங்கத்தில் மருத்துவ முகாம்
திருச்சி, பிப்.14 தொட்டியம் வழக்கறிஞர் சங்கத்தில் முதன்முறையாக
துளசி பார்மசி மற்றும் Max eye விஷன் இணைந்து நடத்திய மருத்துவ முகாம்
தொட்டியம் வழக்கறிஞர் சங்கத்தில் நடைபெற்ற முகாமை
தொட்டியம் நீதிபதி K. அஜீஸ் துவக்கி வைத்தார்.
தொட்டியம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் M. பெரியசாமி, துணைத் தலைவர் சிவக்குமார் பொருளாளர் M. கந்தகுமார் மூத்த வழக்கறிஞர்கள் எம். சரவணன் எஸ்.சுரேஷ் என். சரவணன் மற்றும் நிர்வாகிகள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு P. V. வெங்கட் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்