முசிறி – துறையூர் (தனி )தொகுதி தேர்தல் பார்வையாளர் வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு
முசிறி மற்றும் துறையூர் (தனி )தொகுதி தேர்தல் பார்வையாளர்
வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்தார்
திருச்சி மாவட்டம் 145முசிறி, 146துறையூர் (தனி)தொகுதிகளின்பொது தேர்தல் பார்வையாளராக ஒடிசாவை சேர்ந்த விஜயகுமார் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் இன்று அழகாப்பட்டி ஊராட்சி ஒன்றியநடுநிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிகளையும்,
முசிறி ஊராட்சி ஒன்றியநடுநிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்கைச்சாவடிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது முசிறி தேர்தல் நடத்தும் உதவிஅலுவலர் லோகநாதன்,மண்டல துணை வட்டாட்சியர் கார்த்திக்,தும்பலம் வருவாய் ஆய்வாளர் மணி,மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சபாபதி ஆகியோர் உடன் இருந்தனர்.