திருவெறும்பூரில் உழவர் சந்தை அமைத்துதர அமைச்சரிடம் கோரிக்கை
சென்னை, தலைமை செயலகத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி சந்தித்து தனது திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி திருவெறும்பூர் பகுதிக்கு உட்பட்ட, கணேஷ் நகர்,உய்யகொண்டான் வாய்க்கால் கரைப்பகுதியில், அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்த இடத்தில் திருவெறும்பூரை சுற்றியுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தினசரி உழவர் சந்தை ஒன்றை அமைத்து தர ஆவண செய்யுமாறு கோரிக்கை மனுவை அளித்தார்