மகளிர் கிளைச் சிறையினை புறநகர் பகுதிக்கு மாற்றம் செய்ய வேண்டும்: சட்டபேரவையில் எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் கோரிக்கை
திருச்சி, அக். 15 காந்தி மார்க்கெட் பகுதியிலுள்ள மகளிர் கிளை சிறையினை புறநகர் பகுதிக்கு மாற்றம் செய்ய வேண்டும்: சட்டபேரவையில் எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் கோரிக்கை
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் தனது தொகுதிக்குட்பட்ட காந்தி மார்க்கெட் – பாலக்கரை பகுதியில் அமைந்துள்ள மகளிர் சிறைச்சாலையினை புறநகர் பகுதியில் மாற்றி அமைக்க வேண்டும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்தப்படி வேறு இடத்திற் மாற்றம் செய்து காந்தி மார்க்கெட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பியதற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி , மகளிர் சிறைச்சாலையை மாற்ற புறநகர் பகுதியில் இடம் கேட்டு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோடுள்ளதாகவும், கிடைக்கப்பெற்றபின் உடனடியாக மாற்றுவதாகவும் தெரிவித்தார்.