சரக்கு வாகனத்தை திருடிய 2 பேர் கைது

0 148
Stalin trichy visit

திருச்சி செப்.10 திருச்சி திருவானைக்காவல் கன்னிமார்த்தோப்பு, பகுதியை சேர்ந்தவர் மணிமாறன் (வயது31). இவர் அப்பகுதியில் செங்கல்சூளை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த செப்.8 ந் தேதி இவரது சரக்கு வாகனத்தை கன்னிமார்த்தோப்பு பகுதியில் நிறுத்தி வைத்துள்ளார்.அப்போது 3 மர்ம ஆசாமிகள் சரக்கு வாகனத்தை திருடி சென்றனர். உடனே மணிமாறன் ஜிபிஎஸ்- ஐக் கண்காணித்து, திருடிய நபர்கள் கல்லணை சாலையில் வாகனத்துடன் இருப்பதை கண்டறிந்தார்.

இதுகுறித்து புகாரின்பேரில் திருவரங்கம் குற்றபிரிவு போலீசார் வழக்கு பதிந்து லால்குடி தாளக்குடி பகுதியை சேர்ந்த கிரண்குமார் (வயது23) லால்குடி எசனக் கோரை பகுதியை சேர்ந்த சுந்தர் (வயது 31 ) ஆகியோரை கைது செய்து அவரிடமிருந்து சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர் .மேலும் நவீன் குமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.