திருச்சிக்கு வருகை தந்த தேசிய நதிநீர் பாதுகாப்பு ஆணையத்தின் இணை இயக்குநர் சபிதா மாதவிசிங் மற்றும் ஆலோசகர் பி.பி.பாமன் ஆகியோர் நடந்தாய் வாழி காவிரித் திட்டத்தின் கீழ் ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியில் காவிரியாற்றினைப் பார்வையிட்டு கரைப்பகுதியினை மேம்பாடு செய்தல் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். அருகில் நீர்வள ஆதாரத்துறை கண்காணிப்புப் பொறியாளர் திருவேட்டைச்செல்வம்.செயற்பொறியாளர் மணிமோகன், மாநகராட்சி நகரப் பொறியாளர் அமுதவல்லி, செயற்பொறியாளர் குமரேசன் உள்பட பலர் இருந்தனர்.