தனது ஊதியம் முழுவதையும் ஏழை,எளிய மாணவர்களுக்காக பகிர்ந்தளிக்கும் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ.
திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ முனைவர் இனிகோ இருதயராஜ் தனது எம்எல்ஏ விற்கான சம்பள பணம் முழுவதையும் தொகுதியில் உள்ள ஏழை எளிய மாணவர்களுக்கு பகிர்ந்தளித்து வருகிறார் அதன்படி நேற்று(11.09.2022 ) தனது சட்டமன்ற அலுவலகத்தில் தனது சம்பளப் பணம் சுமார் 6-லட்சத்தை உதவி கேட்ட அனைத்து மாணவர்களுக்கும் பகிர்ந்தளித்தார்

உடன் தெற்கு மாவட்ட மாநகர செயலாளர் 3-வது மண்டல தலைவர் மு மதிவாணன், 2-வது மண்டல குழு தலைவர் பி.ஜெய நிர்மலா, வட்டக் கழக செயலாளர்கள். சிவகுமார்,ஜெயச்சந்திரன்,எம்.ஐ.டி. சாகுல் அமீது, மற்றும் கழக நிர்வாகிகள் கழகத் தோழர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் உடனிருந்தனர்.