அறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கல்
மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி அரியமங்கலம் 43-ஆவது வார்டில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு மாநகர செயலாளரும் கோட்டத் தலைவருமான மு.மதிவாணன் கொடி ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார், இந்நிகழ்வில் கழக மாநில இலக்கிய அணிப் புரவலரும், மாமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் ந.செந்தில்,பகுதி செயலாளர் ஓ.நீலமேகம் M C,வட்ட செயலாளர் சிவசக்தி கார்த்திக் மற்றும் கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.