திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள மும்மூர்த்திகளும்,முப்பெரும் தேவிகளும் குடி கொண்டிருக்கும் உத்தமர் கோயிலில் ரூ 55.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய தேர் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது.
108 திவ்ய தேசங்களில் மூன்றாவது திவ்யதேச ஸ்தலமாகும். திருமங்கையாழ்வரால் பாடல் பெற்றதும் 108 திருப்பதிகளில் ஒன்றானதும் திருக்கரம்பனூர் ஆதிமாபுரம் பிச்சாண்டார்கோவில் என பிரசித்தி பெற்றதும் மும்மூர்த்திகளும்,முப்பெரும் தேவிகளும் எழுந்தருளிய திருத்தலம் இந்தியாவிலேயே அருள்மிகு உத்தமர் கோயில் ஒன்றே ஆகும்
உத்தமர்கோயிலில், ஆண்டுக்கு இரண்டு முறை கோயில் தேர்த் திருவிழா நடைபெறும். சித்திரை மாதம் விஷ்ணுவுக்கும், வைகாசி மாதம், சிவபெருமானுக்கும் நடைபெறும்.
கடந்த 2016ம் ஆண்டு திருப்பணிக்காக கோவில் மூடப்பட்ட நிலையில், 2021ம் ஆண்டு மீண்டும் தேரோட்டம் நடைப்பெற்றது.
, 2016 திருவிழாவின் போது இரண்டு தெய்வங்களையும் ஏற்றிச் செல்லும் கோயில் தேருக்கு சேதம் ஏற்பட்டதை அடுத்து, அசல் போலவே இருக்கும் ‘கட்டு தேர்’ 2021 ல் பயன்படுத்தப்பட்டது என தகவல்கள் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு உத்தமர் கோயிலுக்கு உபயதாரர்கள் நிதி பங்களிப்புடன் ரூ. 55.50 லட்சம் மதிப்பில் புதிய தேர் அமைக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்தது. இதனையொட்டி இன்று புதிய தேருக்கான வெள்ளோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் தலைமையில் கோயில் பணியாளர்கள், குருக்கள்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.