தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரியில் புகைப்பட கண்காட்சி
சர்வதேச புகைப்பட தினத்தை முன்னிட்டு திருச்சி தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரியில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது
சர்வதேச புகைப்பட தினத்தை முன்னிட்டு திருச்சி தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரியில், காட்சி தொடர்புத்துறை சார்பில், மாணவர்களின் புகைப்பட கண்காட்சி நடைபெற்றுவருகிறது.
இதில் வனவிலங்குகள் புகைப்படத்தின் தாக்கம் குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது இதில் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி உதவி பேராசிரியர் பால மணிகண்டன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பை மேற்கொண்டார் இந்த கண்காட்சியின் விழாவின் துவக்க நிகழ்ச்சியாக மாணவர்களின் ஓவிய மற்றும் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது
மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான புகைப்படம் தொடர்பான போட்டியும் நடத்தப்பட்டது
இதனை திருச்சியில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் பார்வையிட்டு வருகிறார்கள்.