நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க உறுதிமொழி ஏற்பு

0 239
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 27 திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி வட்டாரம் பழையபாளையம் ஊராட்சியில் மருங்காபுரி ஒன்றியத்திலிருந்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் சார்பாக வரும் நாடாளுமன்ற தேர்தலில்    100% வாக்களிக்க வேண்டி தேர்தல் விழிப்புணர்வு பேரணி, விழிப்புணர்வு கோலம் , விழிப்புணர்வு கூட்டம் மற்றும் உறுதிமொழி ஏற்கப்பட்டது..

இதில் மருங்காபுரி வட்டார இயக்க மேலாளர் சிவக்குமார், வட்டார ஒருங்கிணைப்பாளரகள், சமுதாய வளப் பயிற்றுனர்கள், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலாளர் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மொத்தம் 106 நபர்கள் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.