உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.57,500 பறிமுதல்
திருச்சி, ஏப்.10 திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த பகளவாடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனைகள் ஈடுபட்டிருந்தனர் அப்பொழுது திருச்சியில் இருந்து துறையூர் நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு லாரியை மடக்கி சோதனை செய்ததில் லாரி டிரைவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரொக்கம் ரூபாய் 57 ஆயிரத்து 500 வரை பறிமுதல் செய்தனர் இது குறித்து லாரி டிரைவர் ஏழுமலை என்பவரிடம் விசாரணை நடத்தி ரொக்க பணத்தை துறையூர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் குணசேகரனிடம் ஒப்படைக்கப்பட்டது அங்கிருந்து பணம் துறையூர் அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.