சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மாவட்ட ஆட்சியரிடம் மனு
திருச்சி, மே 20 மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு திருச்சியில் ஒரு சிலை நிறுவ வேண்டும் என்ற சிவாஜி ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மதுரை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவில் சிவாஜி கணேசன் சிலையை தற்போது நிறுவப்பட்டிருக்கும் இடத்தில் இருந்து அகற்றி வேறு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் நிறுவ வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் சிவாஜி சிலையை நிறுவ விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்தார்.