பராமரிப்புப் பணி: சமயபுரம் பகுதியில் நாளை மின்தடை
பராமரிப்புப் பணிகள் காரணமாக சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 15) மின்சாரம் இருக்காது
இதுகுறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக ஸ்ரீரங்கம் கோட்ட செயற்பொறியாளர் ஆர். செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக சமயபுரம், மண்ணச்சநல்லூர் ரோடு, வெங்கங்குடி, வ. உ. சி நகர் பூங்கா, எழில் நகர், காருண்யா சிட்டி, மண்ணச்சநல்லூர், இருங்களூர், கல்பாளையம், கொணலை, மேலசீதேவிமங்கலம், புறத்தாக்குடி, ச. புதூர், கரியமாணிக்கம், தெற்கு எதுமலை, பாலையூர், வலையூர், கன்னியாகுடி, ஸ்ரீபெரும்புதூர், மாடக்குடி, வைப்பூர், சங்கர் நகர், கூத்தூர், நொச்சியம், பளூர், பாச்சூர், திருவாசி, அழகிய மணவாளம், குமரகுடி, திருவரங்கப்பட்டி, கோவத்தக்குடி, பனமங்கலம், சாலப்பட்டி, எடையப்பட்டி, அய்யம்பாளையம், தத்தமங்கலம், தளுதாளப்பட்டி, சிறுகுடி, வீராணி, சிறுப்பத்தூர், தேவிமங்கலம், அக்கரைப்பட்டி, வங்காரம், ஆயக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9. 45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது என தெரிவித்துள்ளார்.