ரேஷன் கடைகளில் நாளை சிறப்பு குறைதீர் முகாம்
திருச்சி, ஜூன் 14 திருச்சி மாவட்ட 11 வட்டங்களிலும் வரும் நாளை (ஜூன் 15) பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், திருச்சி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மூலம் ஒவ்வொரு மாதமும் வட்ட அளவில் ஒரு கிராமத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, நாளை திருச்சி கிழக்கு வட்டத்தில் சிந்தாமணி புதுத்தெரு, திருச்சி மேற்கு வட்டத்தில் மிளகுப்பாறை, திருவெறும்பூர் வட்டத்தில் மாரிஸ் நகர், ஸ்ரீரங்கம் வட்டத்தில் முத்தரசநல்லூர், மணப்பாறை வட்டத்தில் சீத்தப்பட்டி, முசிறி வட்டத்தில் சொரியாம்பட்டி, துறையூர் வட்டத்தில் சிஎம்எஸ்-4, தொட்டியம் வட்டத்தில் மணமேடு-2, மருங்காபுரி வட்டத்தில் செவந்தான்பட்டி, லால்குடி வட்டத்தில் விரகாலூர், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் பிச்சாண்டார்கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் முகாம் நடைபெறும். காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் முகாம்களில் அந்தந்தப் பகுதி பொதுமக்கள் தவறாமல் கலந்து கொண்டு பயன் பெறலாம். அந்தந்த வட்டக் கண்காணிப்பு அலுவலர்கள் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.