வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் இமானுவேல் சேகரன் நினைவு நாள் அனுசரிப்பு
திருச்சி, செப். 11 சுதந்திர போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரன் 67வது குருபூஜை தினத்தினை முன்னிட்டு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் அமைப்புச் செயலாளர் ஆர்.மனோகரன், அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்திராகாந்தி, பரமேஸ்வரி முருகன் எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் பொன்.செல்வராஜ், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தராஜ் மற்றும் மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் புல்லட் ஜான், அறிவழகன் விஜய், சமயபுரம் ராமு, கண்ணதாசன், ஐயம்பாளையம் ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் கடிகை கோபால், கோப்பு நடராஜ், மணிகண்டம் ஜெயக்குமார், ஆமுர் ஜெயராமன் மண்ணச்சநல்லூர் ஜெயக்குமார்,ஆதாளி வக்கீல் வெங்கடேஷ், ரத்தினம், முத்தரசநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் அதிசிவன், அந்தநல்லூர் ராஜ்மோகன், மண்டல தகவல் நுட்ப பிரிவு திருநாவுக்கரசு, திருப்புகழ், திருச்சி ரெங்கராஜ், சிராஜூதின் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்கள்