தூய்மையான குடிநீர் விநியோகம் : உறுதி செய்த மேயர்
திருச்சி ஏப் 23 திருச்சி மாநகராட்சி, மண்டலம்-5, வார்டு எண்-08, பனிக்கன் தெரு உறையூர் மற்றும் வார்டு எண்10 மின்னப்பன் தெரு, ,கலையின் தெரு, உறையூர் ஆகிய பகுதிகளில் இன்று குடிநீர் வினியோகம் குறித்து மேயர் அன்பழகன் வீடு வீடாக குடிநீரை ஆய்வு செய்து அதன் குளோரின் அளவையும் பொதுமக்கள் முன்னிலையில் குடிநீரைகுடித்துப் பார்த்து பொதுமக்களிடம் தூய்மையான குடிநீர் வருவதை உறுதி செய்தார்.
இந்த ஆய்வில் மண்டலத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன், நகர் நல அலுவலர் விஜய சந்திரன்,செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் உதவி ஆணையர் சென்னி கிருஷ்ணன் உதவி செயற்பொறியாளர் தி இப்ராகிம் மற்றும் பலர் உடன் இருந்தனர்