உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு
மணப்பாறை நகராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தில் நகர்மன்ற அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சியில் நகர்மன்ற தலைவர் கீதா.ஆ.மைக்கேல்ராஜ் தலைமையில் நகர்மன்ற அதிகாரிகள், பணியாளர்கள் அனைவரும் சுற்றுப்சூழலை பாதுகாத்து, நெகிழி இல்லா நிலையை உருவாக்கிட உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து தூய்மைப்பணியாளர்களுக்கு சீருடை வழங்கப்பட்டதுடன் அலுவலக வளாகத்தில் மரக்கன்றும் நட்டு வைக்கப்பட்டது.