கொலை, வழிப்பறி, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருச்சி, ஜூலை 11 கொலை, வழிப்பறி, கஞ்சா விற்பனை ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மாவட்டம், முசிறி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முசிறி, திருமுருகன் 4-வது தெருவில் புகார்தாரர் தர்மலிங்கம் (47) என்பவர் இறந்தவரான சுப்பிரமணியன் என்பவரது வீட்டில் குடியிருந்து வருவதாகவும், கடந்த 16.06.2025-ம் தேதி இறந்தவருக்கும் முசிறி, திருமுருகன் நகரைச் சேர்ந்த கணேசன்@ கணேஷ் (39) என்பவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டதில் எதிரி கணேசன் @ கணேஷ் இறந்தவரான சுப்பிரமணியன் (52) என்பவரை கத்தியால் குத்தியதில் சுப்பிரமணியன் இறந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக எதிரி கணேசன் @ கணேஷ் கைது செய்து முசிறி காவல்நிலைய குற்ற எண். 299/25, U/s 296(b), 103(1) BNS-ன் படி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறுகனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொணலையில் கடந்த 13.05.2025-ம் தேதி பாத்திமா விக்டோரியா (39) என்பவரிடமிருந்து Oppo A58 Cell Phone-யை சமயபுரம், சோலை நகரை சேர்ந்த ராசய்யா (20) என்பவர் பறித்து சென்றது தொடர்பாக சிறுகனூர் காவல்நிலைய குற்ற எண். 141/25, U/s 304(2) BNS -ன் படி வழக்கு பதிவு செய்து எதிரி ராசய்யா சிறையில் அடைக்கப்பட்டார்.
ராம்ஜிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதிய காட்டூர் பாரத் பெட்ரோல் பங்கின் பின்புறம் கடந்த 09.06.2025-ஆம் தேதி அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த புதிய காட்டூர், 2-வது தெருவை சேர்ந்த சசிதரன் (47) என்பவரை கைது செய்து ராம்ஜி நகர் காவல் நிலைய குற்ற எண். 157/25, U/s 8(c) r/w 20(b)(ii)(B) of NDPS Act -ன்படி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
மேற்படி கொலை, வழிப்பறி மற்றும் கஞ்சா வழக்குகளில் ஈடுபட்ட சிறையில் இருந்து வரும் குற்றவாளிகளான கணேசன்@ கணேஷ், ராசய்யா மற்றும் சசிதரன் ஆகியோர்கள் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சியரால் தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு நேற்று சிறையில் உள்ள எதிரிகளிடம் சார்வு செய்யப்பட்டது
திருச்சி மாவட்டத்தில் ஜனவரி-2025 முதல் தற்போதுவரை மொத்தம் 60 தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட எதிரிகளிடம் சார்வு செய்யப்பட்டுள்ளது.