முன்னாள் படைவீரர்களுக்கான குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
திருச்சி, செப்.25 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற முன்னாள் படைவீரர்கள் அவர்தம் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர் நாள் கூட்டத்தில் 10 நபர்களுக்கு ரூ.1.85 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சரவணன் வழங்கினார். இந்நிகழ்வில் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் (கூ.பொ) சு.ப.சங்கர்ராஜா, அரசு அலுவலர்கள், முன்னாள் படைவீரர்கள் அவர்தம் சார்ந்தோர்கள் கலந்து கொண்டனர்.