அமைப்புச்சார தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
திருச்சி, அக்.7 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டு துறையின் சார்பில் திருச்சி பெருமண்டல அலுவலர்களின் பணி திறனாய்வு கூட்டத்தில் அமைப்புச்சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகளை தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்வில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அரசு செயலாளர் கே.வீரராகராவ், ஆணையர் சி.அ.ராமன், மாவட்ட ஆட்சியர் வே.சரவணன், மாவட்ட வருய் அலுவலர் ராஜலட்சுமி, கூடுதல் ஆணையர் திவ்யநாதன், தொழிலாளர் இணை ஆணையர்கள் லீலாவதி (திருச்சி), சுப்பிரமணியன் (திண்டுக்கல்) மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.