மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம்
திருச்சி,அக்.24 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட நிருவாகம் மற்றும் முன்னணி வங்கிகள் இணைந்து நடத்திய மாபெரும் கல்விக்கடன் முகாமினை மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் தொடங்கி வைத்து மாணவர்களுக்கு வங்கிக்டகன் உதவிக்கான ஆணை மற்றும் காசோலைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நிலமெடுப்பு) ஆர்.பாலாஜி, மாவட்ட முன்னோடி வங்கி மோளர் எம்.முருகேசன், அரசு அலுவலர்கள், பெற்றோர், மாணவர்கள் கலந்து கொண்டனர்.