திருச்சி புறநகர் அ.தி.மு.க. வடக்கு மாவட்ட கழக செயலாளராக என்.யோகநாதன் நியமனம்
திருச்சி, மே 13 திருச்சி புறநகர் அ.தி.மு.க. வடக்கு மாவட்ட கழக செயலாளராக என்.யோகநாதன் நியமனம்
திருச்சி புறநகர் அ.தி.மு.க. வடக்கு மாவட்ட கழக செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் மு.பரஞ்சோதி மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணை செயலாளராக பதவி வகித்து வந்த என்.யோகநாதன் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் நடைபெற்ற முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலில் திருச்சி மாவட்டம், முசிறி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். வடக்கு மாவட்ட செயலாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள என்.யோகநாதன் அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமியை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.