அரங்கநாதர் சுவாமி கோவில் சித்திரை தேர் திருவிழா : ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. ரமேஷ் தொடங்கி வைத்தார்
திருச்சி, மே 14 திருச்சி ஶ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஶ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் S.ரமேஷ் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்து துவக்கி வைத்தார்.
வருகை தரும் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்குதலையும் துவக்கி வைத்தார்.
ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது இந்த நிகழ்வில் திருக்கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் திருக்கோயில் அர்ச்சகர் சுந்தர் பட்டர் உள்ளிட்ட கோவில் ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்..