திருவெறும்பூர் தொகுதி வாக்காளர்களுக்கு அன்பில் மகேஸ் பொய்யாமொழி நன்றி அறிவிப்பு

0 18
Stalin trichy visit

திருச்சி, மே 16 திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டவர், திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அ, தேர்தலில் தனக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத திருவெறும்பூர் தொகுதி வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

தொகுதியின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வாக்காளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார்

பொன்மலை, காட்டூர் மற்றும் திருவெறும்பூர் ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட பின்வரும் இடங்களில் வீதி வீதியாகச் சென்று நன்றி தெரிவித்தார்:
பொன்மலைப்பட்டி, ரைஸ் மில் ஸ்டாப், ஆர்மெரி கேட், கல்கண்டார்கோட்டை, கம்பி கேட், அம்பிகாபுரம், கீழ அம்பிகாபுரம் மற்றும் அண்ணா நகர். காட்டூர் & அரியமங்கலம் பகுதி: காட்டூர் வீதி வடகம், அரியமங்கலம், மகாலட்சுமி நகர் மற்றும் விஸ்வாஸ் நகர்.
திருவெறும்பூர் பேருந்து நிலையம் காந்திநகர் கைலாஷ் நகர் அம்மன் நகர் இன்னும் பல்வேறு பகுதிகளில் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

இந்நிகழ்வில் திருச்சி மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன், பகுதி கழகச் செயலாளர்கள் தர்மராஜ், நீலமேகம், விஜயகுமார், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வட்டக் கழகச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் எனப் பெருந்திரளானோர்  நன்றி அறிவிப்புப் பயணத்தில் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.