நர்சிங் மாணவி உயிரிழந்த சம்பவம் : சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் அமைச்சர் ரமேஷ் பேச்சு வார்த்தை
திருச்சி, மே 23 திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட செவிலியர் கல்லூரி மாணவி சீத்தாலட்சுமி என்பவர் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக கூறி மாணவியின் உறவினர்களும் செவிலியர் கல்லூரி மாணவிகளும் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அவர்களுடன் அமைச்சர் ரமேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மாணவிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை செய்ய மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் தகவல்.