திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோவிலில் அமைச்சர் ரமேஷ் ஆய்வு
திருச்சி, மே 25 திருச்சி மலைக்கோட்டை அருள்மிக தாயுமானவர் சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் செயல்பாடுகளையும், திருக்கோயிலுக்கு புதிய அம்பாள் மரத்தேர் திருப்பணிகள் நடைபெறுவதையும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.ரமேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் மண்டல இணை ஆணையர் ஞானசேகரன், செயற்பொறியாளர் முத்துஜெயம், உதவி ஆணையர் அருள்செல்வன், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் உடனிருந்தனர்.