முதல்வர் விஜய் பிறந்தநாள்: வெக்காளியம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழிபாடு
திருச்சி, ஜூன் 22 திருச்சியில் முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா – வெக்காளியம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி மண்டி நடராஜன் வழிபாடு
தமிழக முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை (ஜூன் 22) முன்னிட்டு, திருச்சி உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் கோவிலில் அதிமுக முன்னாள் அமைச்சர் வெள்ளமண்டி நடராஜன் தலைமையில் சிறப்பு வழிபாடும், தங்கத்தேர் இழுக்கும் நிகழ்வும் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அவர்களின் பிறந்தநாளை அக்கட்சியினரும் ஆதரவாளர்களும் தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் ஆன்மீக வழிபாடுகள் மூலம் கொண்டாடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, திருச்சி உறையூரில் உள்ள புகழ்பெற்ற வெக்காளியம்மன் கோவிலில் சிறப்பு பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், முதலமைச்சர் விஜய் நீடூடி வாழவும், அவரது மக்கள் பணிகள் சிறக்கவும் வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து, கோவில் பிரகாரத்தில் அமைந்திருக்கும் தங்கத்தேரை முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதில் திரளான நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை இழுத்து வழிபாடு செய்தனர்.
இந்த நிகழ்வில் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.