திருவெறும்பூர் கோரக்கச் சித்தர் தியான பீட ஆசிரமத்தில் உலக யோகா தினம்
திருச்சி, ஜூன் 22உலக யோகா தினத்தை முன்னிட்டு திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பாக கீழகுமரேசபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கோ ரக்கச் சித்தர் தியான பீட ஆசிரமத்தில் யோகா தினம் நேற்றுகடைபிடிக்கபட்டது.
இந்தயோகா தினம் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய பாஜக தலைவர் நந்தா தலைமையிலும் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய பாஜக பொது செயலாளர் பெல். கார்த்திக் முன்னிலையிலும் சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில பட்டியல் அணி அரசு தொடர்பு இணை அமைப்பாளர் சி. இந்திரன் கலந்து கொண்டு யோகாவை ஆரம்பித்தார். இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ ஶ்ரீ யோகா ஆனந்த சுவாமி யோகாவை சொல்லி கொடுத்தார். இதில் பாஜக நிர்வாகிகள் பால்சீலன் தமிழ் செல்வன் எழில் நகர் கிளை தலைவர்கள் சரவணன் குணா மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்