குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் கபசுர குடிநீர் வழங்கல்
திருச்சி, ஜூலை 13 திருச்சி மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் அறிக்கையில் தற்போது கோடை காலத்தில் ஏற்பட்டுள்ள திடீர் பருவ கால மாற்றத்தால் மர்ம காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் பரவி வருவதால் திருச்சிராப்பள்ளி வழக்கறிஞரின் நலன் கருதி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் கபசுர குடிநீர் வழங்கப்படும் அது சமயம் நமது வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் பருகி பயன்பெறுமாறு தெரிவித்தார்