மாணவர்கள் மீது அடக்குமுறையை ஏவி வரும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து SDPI கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
டெல்லி ஜந்தர் மந்தரில் அறவழியில் போராடும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது அடக்குமுறையை ஏவி வரும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து SDPI கட்சி – திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட துணைத் தலைவர் தளபதி. அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது.
வர்த்தகர் அணி மாநில பொதுச் செயலாளர் கே.முபாரக் அலி,மாவட்ட பொதுச் செயலாளர் Er.முகமது சித்திக்,மாவட்ட துணைத் தலைவர் Y. ரஹீம் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மதர்.Y. ஜமால் முகமது வரவேற்புரை ஆற்றினார்.
இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் மாநில பொதுச் செயலாளர் A.அபூபக்கர் சித்திக் கலந்துக் கொண்டு கண்டன எழுச்சி உரை ஆற்றினார்.
மேலும் Young Democrats மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் மணப்பாறை.ரபீக்,
வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் Dr.S.பக்ருதீன்,மகளிர் அணி (WIM) மாவட்ட தலைவர் தவுலத் நிஷா ஆகியோர்கள் கலந்துக் கொண்டு கண்டன உரை ஆற்றினார்.
மேலும் திருவெறும்பூர் தொகுதி தலைவர்
I.ஷேக்,SDTU மாவட்ட செயலாளர் முகமது வாசிக், ஆகியோர்கள் கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.
இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் Er.சதாம் உசேன்,மாவட்ட பொருளாளர் பிச்சைக்கனி,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏர்போர்ட்.மஜீத்,K.முஹம்மது சலீம்,SDTU மாவட்ட தலைவர் சக்கரை மீரான்,வர்த்தகர் அணி மாநில செயற்குழு உறுப்பினர்கள் அலாவுதீன்,சாதிக் பாஷா,மகளிர் அணி மாவட்ட பொதுச் செயலாளர் ஜே.பாத்திமா,சுற்று சூழல் அணி மாவட்ட தலைவர் ஹக்கீம்,IT wing திருச்சி மண்டல செயலாளர் KSA ரியாஸ்,IT wing மாவட்ட தலைவர் உபைதூர் ரஹ்மான்,மற்றும் கிளை,தொகுதி,அணி நிர்வாகிகள் ,மாணவர்கள்பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துக் கொண்டு கண்டனங்களை பதிவு செய்தனர்.
இந்நிகழ்வை கிழக்கு தொகுதி தலைவர் சபியுல்லா அவர்கள் தொகுத்து வழங்கினார்.
இறுதியாக மேற்கு தொகுதி தலைவர் சையது முஸ்தபா நன்றியுரை ஆற்றினார்.