திருச்சியில் மரம்-மழை-மகிழ்ச்சி மாநில மாநாடு மற்றும் கருத்தரங்கம் வருகின்ற
மே 21 மற்றும் 22 ஆகிய இரண்டு தினங்களும் ஸ்ரீரங்கத்தில் நடக்க உள்ளது.
இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மரம் வளர்க்கும் அனைவரையும் ஒற்றுமைப்படுத்தி, உறுதியான இயக்கமாக மாற்ற மர ஆர்வலர்களின் மரம் – மழை – மகிழ்ச்சி மாநில மாநாடு பற்றி ஆலோசனைக் கூட்டத்தில் “இல்லம் தேடி துணிப்பை ” விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
இதில் மரம் P. தாமஸ், விதைகள் S. யோகநாதன் , தண்ணீர் கே.சி. நீலமேகம், தண்ணீர் அமைப்பு செயலாளர் சதீஸ்குமார், கிருஷ்ணாலயா ராஜூ, தண்ணீர் அமைப்பு நிர்வாகக் குழு ஆர்.கே.ராஜா, தெய்வகுமார், பொன்மலை பாலகிருஷ்ணன், முசிறி நாகேந்திரன் கலந்துக் கொண்டார்கள்.