மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்து மின் ஊழியர் சாவு

0 32
Stalin trichy visit

திருச்சி நவ19  திருச்சி திருவானைக்காவல் கணேசபுரத்தை சேர்ந்தவர் சோலை ராஜன் (வயது 57) இவர் திருவரங்கம் மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 17 ந்தேதி இவர் திருவானைக்காவல் கொண்டையம்பேட்டை வெள்ளாளர் தெரு பகுதியில் உள்ள மின் கம்பத்தில் பழுது பார்க்க ஏறினார்.அப்பொழுது அவர் சுமார் 15 அடி உயரத்தில் ஏறிய பொழுது திடீரென்று தவறி கீழே விழுந்தார்.இந்த சம்பவத்தில் அவரது பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து உடனடியாக சோலை ராஜன் சிகிச்சைக்காக திருவரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பெற்று வந்த சோலை ராஜன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சோலை ராஜின் மனைவி பரமேஸ்வரி திருவரங்கம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.