தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சமத்துவ பொங்கல் விழா
திருச்சி, ஜன.14 தமிழர் திருநாள் பொங்கல் விழா தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக கொண்டாட்டப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் திருச்சி மலைக்கோட்டை வாசலில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இதில் மும்மதத்தினை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்து ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்தனர். சங்கத்தின் பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு தலைமையில் நடைபெற்ற விழாவில் ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.