சுமை தூக்கும் தொழிலாளி மயங்கி விழுந்து சாவு
திருச்சி அக் 9 திருச்சி காந்தி மார்க்கெட் ஜெயில் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆமோதிராஜ். (வயது 47 ) இதய நோயாளி. கடந்த இரண்டு வருடங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது மனைவி ரெஜினா மேரி கொடுத்த புகாரின் அடிப்படையில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.