திருநங்கை தூக்கிட்டு தற்கொலை
திருச்சி அக்.9 திருச்சி தாராநல்லூர் புது தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் இளங்கோவன். (வயது 59). திருநங்கை. இந்த நிலையில் திடீரென வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது சகோதரி சுதா என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.