லால்குடி அரசு கல்லூரியில் ஆங்கில இலக்கிய மன்ற தொடக்க விழா
திருச்சி, ஜன.13 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் அமைந்துள்ள
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கில இலக்கிய மன்ற தொடக்க விழா கல்லூரி முதல்வர். ஜெயக்குமார் தலைமையில் நடைப்பெற்றது..
திருச்சி தேசியக்கல்லூரியின் ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் செ.மஹா, திருச்சி கே.ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியின் ஆங்கிலத்துறை உதவிப் பேராசியரும் ஆங்கில எழுத்தாளருமான ஜெ.சுபஸ்ரீ, ஆங்கிலத்துறைத் தலைவர் எஸ்.வீரமணி , பேரா.காஞ்சனா தேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்