மணப்பாறையில் சிற்றுந்து சேவை : அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்
திருச்சி, ஜூன்19 திருச்சி மாவட்டம், மணப்பாறையில் இன்று புதிய விரிவான சிற்றுந்து திட்டம் 2025 நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிற்றுந்துகளை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் சுரேஷ்பாபு, டநடராஜன், போக்குவரத்து வாகன ஆய்வாளர்கள் செந்தில்குமார், செந்தில், அருண்குமார், அகமது மீரான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.