குழந்தைகளுக்கு “தேசிய தலைவர்கள்” பற்றிய ஓவியம் வரைதல் போட்டி
திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் 54-வது தேசிய நூலக வார விழாவையொட்டி வருகிற 20-ந்தேதி முடிய ஒரு வார காலத்திற்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல் நாள் நிகழ்ச்சியாக நேற்று மாவட்ட மைய நூலகத்தில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு “தேசிய தலைவர்கள்” பற்றி ஓவியம் வரைதல் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களது பெற்றோர்களுடன் வருகை தந்து ஆர்வமுடன் கலந்து கொண்டனர். ஓவியப்போட்டியை வாசகர் வட்டத் தலைவர் கோவிந்தசாமி, தொடங்கி வைத்தார். மாவட்ட நூலக அலுவலர் சிவகுமார், துணைத்தலைவர்கள்.நன்மாறன், வல்லநாடன்.இலகணேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.