மத்திய பேருந்து நிலையம் அருகே முதியவர் சடலம் மீட்பு
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள திருமண மஹால் அருகே 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக நேற்று முன்தினம் இரவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்து கிடந்த முதியவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.