மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களுக்கு நிவாரண உதவி

0 147
Stalin trichy visit

திருச்சி, செப். 11 திருச்சி மாவட்டம்,  சோமரசம்பேட்டை அருகே உள்ள எட்டுமாந்திடல் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த சக்திவேல் இவரது மனைவி ராதிகா (44) அதே கிராமம் கொசவன் திடலை சேர்ந்த செல்வராஜ் மனைவி செல்வி(48) ஆகிய இரண்டு விவசாய கூலிதொழிலாளிகளும் மின்சாரம் தாக்கி ( மே 10 அன்று) உயிரிழந்தனர் .

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி உயிரிழந்தவர்களின்  குடும்பத்திற்கு ஆறுதல் கூறி முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நிவாரணம் பெற்று தருவதாக கூறினார்.

இந்நிலையில்  மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதிக்கான ஆணைகளை இன்று வழங்கினார். உடன் தலைமை பொறியாளர் உள்ளிட்ட மின்வாரிய அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள் உடன் இருந்தனர்

Leave A Reply

Your email address will not be published.